அந்தக்
கிரகம் பழமையான இனத்தைச் சார்ந்தது. அவர்கள் ஓரளவுதான் பேசக் கற்றுக்
கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் இசைக் கருவிகளை உருவாக்கி அவற்றை வாசித்து
தங்களின் பேச்சை வெளிப்படுத்தினார்கள். இது அந்த இனம் முழுக்கப் பரவ எல்லோரும் ஏதோ
ஓர் இசைக் கருவியை வாசித்துப் பழகி அதிலேயே அவர்களின் எல்லா பேச்சு
பரிமாற்றங்களையும் நிகழ்த்திக் கொண்டார்கள். அதனால் அந்தக் கிரகம் முழுவதுமே
பல்வேறு வகையான இனிமையான இசையால் நிரம்பியிருந்தது. இதைக் கண்ட மாற்றொரு
கிரகவாசிகள் அந்தக் கிரகத்தைத் தங்கள் வசப்படுத்த எண்ணினார்கள். அதே போல் இசைக்
கருவிகளை உருவாக்கி வாசிக்கும் ஒருவனை அங்கு அனுப்பிவைத்தார்கள். அவன் வாசித்த
இசைக்கருவி பல வேறுபட்ட ஒலிகளை எழுப்பியது. மேலும் அதில் பேச்சு மட்டும் அல்லாமல்
இன்னும் பல உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதாகவும் நிறைவு செய்வதாகவும்
இருந்தது. அதைக் கண்ட இந்தக் கிரகத்தினர் அதே போன்ற கருவியைச் செய்து தருமாறு
கோரினார்கள். அவனும் எல்லோருக்கும் அதே போன்ற இசைக் கருவிகளைச் செய்து கொடுத்தான்.
அவர்கள் எல்லோரும் அந்த இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு இசைத்ததால் யாருடைய இசை
நன்றாக இருக்கிறது என்ற போட்டி எழுந்தது. இது வரை இசையாகப் பேசியவர்கள் இப்பொழுது
சண்டையிடத் தொடங்கினார்கள். அந்தக் கிரகம் முழுக்க இன்னிசையாக இருந்த நிலை மாறி
பேரிரிச்சைலானது. பின் கடும் ஓலமாக மாறியது. ஒருவரை ஒருவர் குத்திக் கிழித்து
குதறி அழிந்தார்கள். இதை எதிர்பார்த்து வந்த அந்த வேற்றுக்கிரகவாசி தன் இலக்கை
எட்டிவிட்டத் திருப்தியில் அந்தக் கிரகத்தையும் தனது சொந்தமாக்கிக் கொண்டான்.
No comments:
Post a Comment