Saturday 24 July 2021

குறுங்கதைகள்-மொட்டு






 மஹாராணிக்குக் காலையில் எழுந்த போதே தன் சோலையில் பூத்திருந்த அந்த மொட்டைப் பறிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஒரு வாரமாக தன் தோட்டத்தில் இருந்த செடியில் அந்த பூச்செடி மொட்டுவிட்டிருந்தது. அதன் நிறம் இது வரை அவள் கண்டதில்லை. அது அவளை ஈர்த்துக் கொண்டே இருந்து. அதைப் பற்றி அவள் பல கனவுகள் கண்டாள். அந்த மொட்டை அவள் தின்றுவிடுவது போலவும் இரவில் அவளைப் போன்ற மற்றொரு பெண்ணாக அவளிடமிருந்தே பிரித்து விடுவது போலவும் பலப்பல கனவுகள் வந்தன. அவள் சிறுமியாக இருந்த போது கண்ட கனவும் அவளுக்குள் சட்டென்று நினவுக்கு வந்தது. அவள் அதிர்ச்சி அடைந்தாள். அதில் அவள் ஒரு செடியின் மொட்டைக் கசக்கிவிடுகிறாள். அதில் குடி கொண்டிருந்த இது வரைக் கண்டிராத விலங்கின் குட்டி அடிமுடி காண முடியாத வகையில் பெரிதாகி அவள் முன் நின்று அச்சுறுத்தியது. அவள் அலறி ஓட அது ஒரே பாய்ச்சலில் அவளைத் தூக்கி தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அவள் பெரியவளானவுடன் இது போன்ற ஒரு மொட்டைக் கசக்காமல் இருந்தால் விட்டுவிடுவதாகக் கூறியது. அவள் நடுங்கி சம்மதித்து கண் திறந்தாள். இப்போது அந்த மொட்டைக் கசக்கவேண்டும் என்ற பேரார்வம் அவளுள் எழுந்தது. சோலைக்குப் போனாள். அங்கு ஓர் ஆடு அந்த மொட்டைத் தின்று கொண்டிருந்தது. இவளைக் கண்டவுடன் இவளைப் போன்றே அச்சு அசலான பெண்ணாக மாறியது. இவள் அருகே வந்தது. இவளைத் தொட்டது. உடனே மஹாராணி ஒரு மொட்டாக மாறினாள். அதை அந்தச் செடியில் செருகிவிட்டு அரண்மனையை நோக்கி ஆட்டிலிருந்து பெண்ணாக மாறிய மஹாராணி நடந்து சென்றாள்.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...