மகனுக்கு
உடல்நிலை சரியில்லை. மூளையில் கட்டி என்று சொல்லிவிட்டார்கள் அறுவை சிகிச்சைக்குப்
பின் என்ன ஆகும் என மருத்துவர்கள் உறுதி கூறவில்லை. எனக்கிருந்த ஒரே துணை முருகன்தான்.
அவனிடம் முறையிட்டேன். எந்தச் சலனமும் இல்லை. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அது தீர்க்கப்படும்
என்பதற்கு முருகன் ஏதாவது அறிகுறியைத் தருவான். இது வரை எந்த அறிகுறியும் தென்படவில்லை.
முருகனுக்கு விருப்பமிருந்தால் நலம் பெறட்டும் இல்லை எனில் முருகன் விருப்பத்தை ஏற்கலாம்
என முடிவு செய்துவிட்டேன். அறுவை சிகிச்சைக்கு ஒரு வாரத்திற்கு முன் மகனிடம் ஏதோ ஒரு
மாற்றம் தென்பட்டது. இது நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை. பொறுமையாக இருந்து என்ன
நடக்கிறது என்று பார்க்கலாம் என நினைத்தேன். கடைசியாக ஒரு முறை ஆய்வுக்கு மகனை அழைத்துச்
சென்றார்கள். கட்டி இன்னும் சிறியதாகிவிட்டது எனவும் அறுவை சிகிச்சை தேவை இல்லை எனவும்
கூறி மருந்து மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். முருகனின் திருவிளையாடல் எனப் புரிந்துகொண்டேன்.
இது எப்படி நடந்திருக்கும் எனும் ஆவல் அடக்க முடியாததாக இருந்தது. அபாயத்திலிருந்து
காக்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை. இதை யோசித்துக் கொண்டே வெளியே பார்த்த போது
ஒரு ஸ்கார்ப்பியோ வண்டி வந்து நின்றது அதன் முன் பகுதியில் ஒரு வேல் நிறுத்தப்பட்டிருந்தது.
வேலின் தண்டு சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த நேரத்தில் அடித்த ஒளி அது வேறு பல பொருள்களையும்
தந்தது. தேளின் கொடுக்குப் பதிவதற்கு முன் வேலால் அது நசுக்கப்பட்டிருக்கிறது என்பதாக
அதைப் புரிந்துகொண்டேன்.
No comments:
Post a Comment