அவன் அந்த
மலையைக் கண்டு பெரிதும் விருப்புற்று அங்கு ஒரு வீட்டைக் கட்ட நினைத்தான். வீடு
பாதி கட்டி இருக்கும் போது இடிந்து விழுந்தது. அவனுக்கு என்ன காரணம் எனப்
புரியாமல் பெரும் துயருற்றான். அப்போது அந்த மலையின் அடிப்பகுதியில் ஒரு கல்லில்
இருந்த தேரை தான் இருக்கும் கல்லைக் கண்டு அவன் அகற்றிவிட்டால் வீட்டைக்
கட்டமுடியும் என்று சொன்னது. அவன் பெரு முயற்சி செய்து பார்த்தான். முடியவில்லை.
முருகனிடம் முறையிட்டான். மலை மீது வீடு கட்ட வேண்டுமா மலை இருக்கும் இடத்தில்
வீடு கட்ட வேண்டுமா என முருகன் கேட்டான். எது இருந்தாலும் தனக்கு ஏற்புடையதுதான்
என்று இவன் கூறிவிட்டான். அடுத்த நாள் அவன் அந்த இடத்தைச் சென்று பார்த்த போது மலை
கரைந்து போயிருந்தது. அந்தக் கல்லும் காணவில்லை. தேரையும் இருக்காது என நம்பினான்.
அந்த இடத்தில் வீட்டைக் கட்டி முடித்தான். வீட்டுக்கு ஒரு கிணறு வெட்ட முடிவு
செய்தான். கிணறு வெட்டும் போது மண் குவியல் கிணறு மூடிவிட்டது. மீண்டும்
முருகனிடம் முறையிட்டான். அந்தத் தேரையின் வேலைதான் இது எனப் புரிந்துகொண்ட
முருகன், கிணறு இருந்த இடத்தில் சிறு மலையை உருவாக்கச் சொன்னான். அவனும் அந்த
இடத்தில் கல், மண்ணைக் குவித்து ஒரு சிறு மலையை உருவாக்கினான். அந்த மலை தனக்கானது
என மகிழ்ந்து போனது தேரை. அடுத்த நாள் அந்த மலை கரைந்து கிணறு உருவானது. தான்
இருக்கும் கற்களை எல்லாம் கரைத்துக் கொண்டே போனால் எப்படி வாழ்வது என முருகனிடம்
முறையிட்டது தேரை. முருகன் அந்தத் தேரையை கற்கள் மட்டுமே இருக்கும் கிரகத்தில்
கொண்டுவிட்டான். அந்தக் கிரகத்தைச் சாய்த்துவிட்டு ஒரு கல்லில் இருந்து கொண்டு விண்வெளியைச்
சுற்றி வந்து கொண்டிருந்தது தேரை.
Monday 6 September 2021
குறுங்கதைகள்-தேரை
Subscribe to:
Post Comments (Atom)
மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு
மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
இன்று நாம் வாழும் உலகம், மின்னணு தொடர்பு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது நோம் சாம்ஸ்கி தம் நூலில் கூறியதைப் போன்று வெகுஜன...
-
மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...
No comments:
Post a Comment