அவள்
வீட்டின் சுவரிலிருந்து ஊடுருவிப் பார்த்தான் அவன். அவளின் குழந்தைத்தனத்தையும்
ஸ்படிகம் போன்ற தூய எண்ணங்களையும் கண்டு தான்தான் அந்தக் குழந்தையாய் இருப்பதாக
எண்ணிக் கொண்டான். அவளை முப்பொழுதும் கண்காணித்து வந்தான். ஒரு நாள் அவளை நேரில்
சந்திக்கும் ஆர்வம் கொண்டு அவளிடம் பேசினான். உன்னை என் குழந்தைப் பருவ நானாகவே
காண்கிறேன். உன்னைச் சந்திக்க வேண்டும் என்றான். அவளும் சந்திக்கலாம் ஆனால் அவள்
கேட்பதை அவன் கொடுக்கவேண்டும் என்றாள். அதற்கு ஒத்துக்கொண்டு அவன் நேரில் வந்தான்.
அவள் அவனுடைய தலையை வெட்டிக் கொடுக்குமாறு கேட்டாள். இதற்கு முன் இதே போல் அவளைக்
கண்காணித்தவர்கள் ஒன்பது பேர் நேரில் வந்து தலையை வெட்டிக் கொடுத்துவிட்டுப்
போயிருக்கிறார்கள். அண்டத்தின் பூதத்திற்கு 9 தலைகளைப் படைத்தால் அது வரம்
கொடுக்கும். அதில் ஒன்று தலை கொடுத்தவர்களை உயிர்ப்பிப்பதும் ஆகும் என்றாள். அவன்
தன் தலையை வெட்டிக் கொடுத்தான். அண்டத்தின் பூதம் கேட்ட 9 தலைகளைக்
கொடுத்துவிட்டதால் இனி வரம் வேண்டும் என்று கேட்கிறாள். பூதமும் 7 கண்களைக்
கொடுத்து அவற்றிடம் கேட்டு வரங்களை நிறைவேற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டது. முதல்
கண்ணிடம் தலைகொடுத்த 9 பேரையும் உயிர்ப்பிக்க வேண்டினாள். அந்தக் கண்மூடித்
திறந்தது. வரம் நிறைவேறியது. இரண்டாவது கண்ணிடம் எல்லா அண்டத்திலுள்ள
உயிர்களிடமும் எந்த ஆயுதமும் இருக்கக்கூடாது என வேண்டினாள். ஆயுதங்கள் அழிந்தன.
மூன்றாவது கண் உயிர்களிடம் பழி, குரோதம். கோபம், பசி, பிணி உட்பட எந்தத் தீயதும்
இன்றி வாழவேண்டும் என வேண்டினாள். கண் மூடித் திறந்தவுடன் வரம் கிடைத்துவிட்டது. நாலாவது
கண்ணிடம் உயிர்கள் அனைத்தும் முக்காலமும் அறியவேண்டும் என வேண்டினாள். அதுவும்
கிடைத்து. ஐந்தாவது கண்ணிடம் எல்லா உயிர்களும் 11 அண்டங்களிலும் பயணிக்கவேண்டும்
என்றாள். அதுவும் நிறைவேறியது. ஆறாவது கண்ணிடம் அண்ட பூதங்கள் உட்பட இனி எந்தத்
தீய உயிரும் பிறக்கக்கூடாது என வேண்டினாள். கண் மூடித்திறந்தவுன் வரம்
நிறைவேறியது. ஏழாவது கண்ணிடம் 11 அண்டங்களைத் தாண்டி 12வது அண்டத்தில் தான்
வாழவேண்டும் என வேண்டினாள். அண்டங்களின் உற்பத்திச் சக்தியில் கலந்தாள்.
No comments:
Post a Comment