Friday, 30 July 2021

குறுங்கதைகள்-அவள்






அந்த மலைப்பாதையில் அவள் நடந்துகொண்டிருந்தாள். அவள் எதிரே வந்தவன் அவளை உற்றுப் பார்த்துவிட்டுப் போனான். அவள் தன் இறந்து போன மனைவி போலவே இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தந்தது. தன் மனைவி தன்னைப் பொருட்படுத்தாமல் நடந்து செல்வது போல் அவனுக்குத் தோன்றியது. அவளைக் கொன்றது போல இவளையும் கொல்லவேண்டும் என்ற எண்ணத்துடன் அவளைப் பின் தொடர்ந்தான். எதிரே ஒரு வயதானவர் வந்து கொண்டிருந்தார். அவள் தான் கொலை செய்த தன் மகள் போல் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். அந்தப் பெண்ணை நிறுத்தி அவளைத் தன் மகள் போல் இருப்பதாகக் கூறி தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அவள் மறுத்துவிட்டு நடந்தாள். அந்த வயதானவர் சிறிது தூரம் திரும்பிச் சென்று விட்டு மீண்டும் அவளைப் பின் தொடர்ந்தார். எதிரில் ஒருவன் வந்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியுற்று நின்றுவிட்டான். அந்தப் பெண்ணைப் பின்தொடரும் இருவரையும் பார்த்து அந்தப் பெண்ணைப் பின்தொடரவேண்டாம் என்று எச்சரித்தான். அவளைத் தன் அறிந்திருப்பதாகக் கூறி அவர்களுடன் நடந்தான். அவள் ஒரு பிசாசு என்றும் அதனால் பின்தொடரவேண்டாம் எனத் தடுத்தான். அந்த மலைப்பாதையில் இறுதியில் உள்ள மலை உச்சிக்குக் கொண்டு சென்று தள்ளிவிட்டுவிட்டு அவள் காணாமல் சென்றுவிடுவாள் என்றான். அவர்கள் இருவரால் அதை நம்பமுடியவில்லை. அவர்கள் அவன் சொன்னதை நம்பாமல் அவளைப் பின்தொடரப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். மலை உச்சி வந்தது. அவள் திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தாள். அவர்கள் இருவரும் அவள் அருகே போனார்கள். அவள் உடனே மலை உச்சியிலிருந்து குதித்துவிட்டாள். அவர்கள் இருவரும் வேறு வழி தெரியாமல் அவளைக் காப்பாற்ற எண்ணி அங்கிருந்து குதித்தார்கள். சில நாட்களுக்குப் பின் அவள் மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தாள். 

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...