எப்போதும்
அந்த மலையில்தான் அவளும் அவள் தோழியும் பள்ளி முடிந்தவுடன் விளையாட வருவார்கள்.
அவர்களுக்கு மலையின் அழகும் கம்பீரமும் அதனை நெருங்க நெருங்கத்தான் அதிகரிக்கும்.
அதன் மௌனம் அவர்களுக்குள்ளும் எப்போதும் குடிகொள்ளும். அவர்கள் இருவரும் மலை அருகே
போவதற்காக ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று மலை முன்னே நகரத்
தொடங்கியது. தினமும் அவர்கள் இருவரும் எத்தனை முறை அந்த மலை மீது ஏறி இறங்கி
விளையாடி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த மலை அன்று மட்டும் ஏன் நகர்கிறது என இருவருக்கும் அதிசயமாக இருந்தது. இருவரும் சிறிது பின்வாங்கினார்கள்.
அது மெதுவாக முன்னோக்கி வந்து கொண்டிருந்தது. இதை எப்படி நிறுத்துவது எனப்
புரியாமல் இருவரும் விழித்தார்கள். மலையின் முன் மண்டியிட்டு அமர்ந்து இருவரும்
முறையிட்டார்கள். அவர்களை விடப் பல மடங்குப் பெரிதாக இருக்கும் மலை இப்படி நகர்ந்தால் அதன்
எதிரில் எதுவும் இருக்க முடியாது. எல்லாமும் அழிந்துவிடும். அதனால் தயைக் கூர்ந்து
நகர்தலை நிறுத்தும்படி இருவரும் வேண்டிக் கொண்டார்கள். மலை சொன்னது நகர்தலை
நிறுத்த முடியாது. ஏனெனில் தனக்குள் இருக்கும் கல் அசுரன் இப்படி நகர
உத்தரவிட்டிருப்பதாக மலை கூறியது. அந்த அசுரனுக்குப் பிடித்த ஒரு பாடல் எங்கோ
ஒலிப்பதால் அதைக் கேட்க இப்படி நகரச் சொல்வதாக மலை சொன்னது. அந்தப் பாடல்
தங்களுக்குக் கேட்கவில்லையே என்று இரு தோழியரும் சொன்னார்கள். மண்ணின் அடியில்
காதை வைத்துக் கேட்டால் அவர்களுக்கும் அந்தப் பாடல் கேட்கும் என மலை கூறியது. உடனே
அவர்கள் இருவரும் அருகில் இருந்த வற்றிப் போனக் கிணற்றில் குதித்தார்கள். அந்தக்
கிணற்றின் அடிப்பகுதியில் இருந்த மண்ணின் மீது காதை வைத்துக் கேட்டார்கள். அப்போது
ஓர் இனிமையான பாடல் கேட்டது. அதன் இனிமையில் சொக்கி இருவரும் அந்தப் பாடலைப் பாடத்
தொடங்கினார்கள். மலை, கிணற்றின் அருகில் வந்து நின்றது.
Friday, 10 September 2021
குறுங்கதைகள்-மலை
Subscribe to:
Post Comments (Atom)
பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட ...
No comments:
Post a Comment