அவளிடம்
பேச முடியவில்லை. எந்தச் செய்தியையும் அவளுக்கு அனுப்ப முடியவில்லை. அவளைப் பார்க்காமலே
இத்தனை நாட்கள் மூளை அலைவரிசையில் பேசிக்கொண்டு வந்திருக்கிறேன். இப்போது அது போதாது
என்று தோன்றிவிட்டது. அவள் இல்லாமல் வாழ முடியாது என உறுதியாகத் தோன்றுகிறது. எப்படி
அவளிடம் இத்தனையும் சொல்வது. நீண்ட நேர யோசனைக்குப் பின் அவள் கனவில் புகுந்து சொல்லிவிடுவது
என முடிவெடுத்தேன். இரவு வெகு நேரம் விழித்திருந்து நள்ளிரவு தாண்டிய பின் அவள் கனவுக்குள்
புகுந்தேன். முதலில் அவள் என்னை அடையாளம் காணவில்லை. பின்பு புரிந்துகொண்டாள். கனவில்
என் உருவம் வேறு மாதிரி இருப்பதாகச் சொன்னாள். என் எண்ணத்தில் இருக்கும் எல்லாவற்றையும்
கொட்டினேன். அவள் சிரித்துக் கொண்டாள். அவளால் இதற்கு எதுவும் செய்யமுடியாது என்றாள்.
ஏதாவது ஒரு தீர்வு கிடைத்தால் எனக்கு ஆறுதல் கிடைக்கும் என்றேன். தினம் அவள் கனவில்
நான் வரலாம் என்றாள். அது எனக்கு உகந்ததாகப்பட்டது. அவள் எண்ணத்தை என் சார்பாக மாற்ற
இதுவே சரியான உத்தி என முடிவெடுத்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியைக் கனவில் சொல்லலாம்
என நினைத்தேன். ஒரு நாள் என் பலவீனத்தைக் கூறி அவளிடம் கருணையைப் பெற முயன்றேன். அடுத்த
நாள் என் பலத்தைக் கூறி அவளிடம் பெருமிதம் கொண்டேன். அடுத்த நாள் அதே போல கனவில் மட்டுமே
சந்திப்பதில் இருக்கும் சிக்கலைக் கூறினேன். என் சிக்கலை அவள் புரிந்து கொண்டு என்
கனவில் அவள் வருவதாகச் சொன்னாள். அடுத்த நாள் நான் காத்திருந்தேன். அவள் என் கனவில்
வரவில்லை. அதற்கடுத்த நாள் என் கனவில் அவள் வந்தாள். முந்தைய நாள் தன் கனவில் வேறொருவர்
வந்ததாகக் கூறினாள்.
Wednesday, 11 August 2021
குறுங்கதைகள்-கனவுக்குள் புகுதல்
Subscribe to:
Post Comments (Atom)
மா.அரங்கநாதன் படைப்புகளில் தோற்றமெடுக்கும் நனவுநிலை -சிறுகதை படைப்பாக்கத்தின் உள்ளார்ந்த கட்டமைப்பு
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
(தினவு ஜூலை 2025ல் வெளியான கட்டுரை) எல்லா வகையான படைப்பாக்கங்களின் அடிப்படையும் நனவுநிலையின் தூண்டுதலாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது...
No comments:
Post a Comment