Monday, 2 August 2021

குறுங்கதைகள்-மயில் பெண்




மேல் பாதி பெண். கீழ் பாதி மயில். இப்படி இருக்கும் இவர்கள் மயிலின் எண்ணத்தைப் பெண்ணும் பெண்ணின் எண்ணத்தை மயிலும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் போன்ற மற்ற உயிரினங்கள் ஏதும் இல்லை என்பதால் அவற்றுக்கு என தனி சிறப்பு இருந்தது. மற்ற உயிரினங்கள் இவர்களை மதித்தன. பெண்ணுக்கு மயிலின் குரல் பிடிக்கவில்லை. இருந்தாலும் அந்தக்  குரலில் பேசவேண்டியிருந்தது. மயிலுக்கு பெண்ணின் குணம் பிடிக்கவில்லை. மயில் தன் ஆட்டத்தைத் தொடர்கையில் பெண் வெறுத்தாள். அவள் பேசுகையில் மயில் வெறுத்தது. இருவரும் பிணைந்து இனி வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தார்கள். பெண் பிரிந்தால் அவளுடைய பாதியாக யார் இருப்பது என்ற போட்டி உருவானது. மயில் பிரிந்தால் அதற்குப் பாதியாக பல உயிரினங்கள் முன் வந்தன. இந்தப் பஞ்சாயத்தைத் தீர்க்க முருகனிடம் சென்றன. மயில் தன் பாதியாக மயிலிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம். பெண்ணும் தன் பாதியாக மற்றொரு பெண்ணைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தான். சில நாட்கள் கழிந்தன. பெண்ணும் மயிலும் பிணைந்து இருந்த போது வந்த சண்டைகளை விட இப்போது அதிக சண்டைகள் வந்தன. மீண்டும் மயில் பெண்ணிடம் வந்து பழையபடி பிணைந்திருக்கலாம் என்றது. பெண்ணுக்கும் அது பிடித்திருந்தது. மீண்டும் முருகனிடம் சென்று முறையிட்டார்கள். இந்த முறை மயில் பெண்ணாகவும் பெண் மயிலாகவும் மாறிப் பிணைய முருகன் ஆணையிட்டான். மீண்டும் ஒரு போர் தொடங்கியது. 

No comments:

பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்

  ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...