Friday 27 August 2021

குறுங்கதைகள்-பானை





தோழிகள் இருவரும் பானைகளைச் செய்யும் தொழில் செய்து வந்தார்கள். ஒருத்தியின் பானைகள் மிக அழகாக நேர்த்தியாக இருந்தால் அதிக விலைபோயின. மற்றொருத்திக்கு இது நெருடலையும் மன உளைச்சலையும் தந்தது. தன்னுடைய பானைகளும் குறையின்றித் தான் இருக்கின்றன. ஆனால் ஏன் விலை போவதில்லை என கவலை கொண்டாள். தன் பானையின் நேர்த்தியின்மையை ஒரு நாள் தோழி சுட்டிக்காட்டினாள். அதிலிருந்து அவளைப் பார்ப்பதையும் அவளுடன் பேசுவதையும் நிறுத்தினாள். ஒரு மாந்திரீகனிடம் சென்று தனக்குப் போட்டியாகத் தன் தோழி செய்து வரும் பானைத் தொழிலை இனி அவள் செய்யவே கூடாது எனவும் அதற்காக ஏதாவது ஒரு சூனியம் செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாள். மாந்திரீகன் அவளிடம் ஒரு பானையைக் கொடுத்து அதில் தினம் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். அதை உடையாமல் பாதுகாக்கவேண்டும். உடைந்தாலோ தண்ணீர் ஊற்றாமல் இருந்தாலோ அவள் செய்யும் தொழில் நாசமாகிவிடும் எனக் கூறினான். அவளும் அதை ஏற்று அதைப் பத்திரமாக வைத்து தண்ணீர் ஊற்றி வந்தாள். சில நாட்களிலேயே அவளுடையத் தோழியின் பானைகள் எல்லாம் உடைந்து போயின. அவளால் விற்பனைக்குக் கொண்டுச் செல்ல முடியவில்லை. அவள் வீட்டில் முடங்கினாள். அவள் ஒரு பூனையை வீட்டில் வளர்த்து வந்தாள். அதனிடம் தன் தொழில் நலிந்து போய்விட்டதைக் கூறி அழுதாள். இதைக் கேட்டப் பூனை சமயம் பார்த்துக் காத்திருந்தது. தன் உரிமையாளரின் கண்களில் கண்ணீர் வடியச் செய்தவள் வீட்டை விட்டு எப்போது வெளியே கிளம்புவாள் என்று பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் அவள் பானை செய்ய மண் வாங்க வெளியே கிளம்பினாள். அப்போது அவள் வீட்டுக்குப் போய் மாந்திரீகன் கொடுத்த பானையை உருட்டி வெளியே போட்டுவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு பானையை வைத்தது. மாந்திரீகனின் பானையையும் உடைத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டது. அடுத்தநாள் வழக்கம் போல் மாந்திரீகனின் பானை என எண்ணி அங்கிருந்த பானையில் தண்ணீரை ஊற்றினாள். அவள் செய்து வைத்த பானைகள் எல்லாம் கீழே விழுந்து உடைந்தன.

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...