Monday 30 August 2021

குறுங்கதைகள்-கோழி




அவன் ஒரு கோழி வளர்த்து வந்தான். அது மற்ற எந்தக் கோழிகளுடனும் சேராமல் இருந்தது. அதன் போக்கில் ஏதோ மாற்றம் தெரிந்ததைக் கண்டு அதைத் தொடர்ந்து கவனித்து வந்தான். இரவில் அது காட்டு மேயச் சென்றது. காலையில் இவன் வீட்டுக்கு வந்துவிடும். இரவில் அது டைனோசர் போல் மாறி மற்ற விலங்குகளை வேட்டையாடுவதாக ஒரு செய்தி ஊருக்குள் பரவியது. இவனுக்கு அது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்து. ஒரு நாள் இரவு ஒரு மூட்டையில் சாணியை எடுத்துக் கொண்டு கோழியின் பின்னால் பதுங்கிப் பதுங்கிக் காட்டுக்குச் சென்றான். காட்டுக்குள் போனவுடன் அது சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வேகமாக ஓடியது. இவனும் அதைப் பின்தொடர்ந்தான். காட்டின் நடுவில் ஒரு பெரிய வெளி ஒன்று வந்தது. அதற்கு நடுவில் போய் கோழி நின்றது. அது நின்ற இடத்தில் ஒரே ஒரு பெரிய மரம் மட்டும் இருந்தது. இவன் மெதுவாக மறைந்து தவழ்ந்து அந்த மரத்தை அடைந்து அதில் ஏறிவிட்டான். கோழிக்கு நேராக இருப்பது போல் அமர்ந்து கொண்டான். அதனிடம் ஏதாவது மாற்றம் தென்பட்டால் சாணியை அதன் மீது வீசி எறியத் தயாராக இருந்தான். அது வேறு ஏதோ ஒலியை எழுப்பியது. அதுதான் தருணம் அவன் என நினைத்து சாணியை அதன் மீது வீசினான். அந்தக் கணம் அவன் முகத்திற்கு அருகே டைனோசரின் முகம் வந்து நின்றது. அதிர்ச்சியில் உறைந்து மரத்திலிருந்து குதித்து ஒரே ஓட்டமாக ஓடிவந்தான். டைனோசர் பின்னால் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. எப்படியோ ஓடி சாலைக்கு வந்து திரும்பிப் பார்த்தான். கோழி ஓடி வந்து கொண்டிருந்தது. அவன் ஏதோ கனவு என நினைத்து கோழியைப் பிடித்துக் கொண்டு போகலாம் என அங்கேயே நின்றான். அவன் அருகே வந்த கோழி, டைனோசர் போல் பெரிதாகி அவனை விழுங்கியது.

 

 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...