அவன்
சிறிய சிறிய கண்டுபிடிப்புகளைச் செய்யக்கூடியவன். ஆனால் அவற்றைக் கொண்டு
கண்டுபிடிக்கவே முடியாத பல களவு வேலைகளைச் செய்திருக்கிறான். ஒரு வங்கியின்
பணக்கிடங்கு இருக்கும் அறைக்குள் அவனால் நுழைய முடியவில்லை. அந்தக் கதவு திறக்கச்
சிலருடைய விழித்திரையைப் பதிவு செய்திருப்பதாலும் அவர்களுடைய பெருவிரல்
அடையாளத்தைக் கொண்டிருப்பதாலும் லேசர் கதிர்களைப் பாய்ச்சுவதாலும் மட்டுமே
திறக்கும். லேசர் கதிர்களைப் போலவே ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சக்கூடிய ஒரு கடிகாரத்தை
உருவாக்கிக் கட்டிக் கொண்டான். அந்தக் கதவுகளைத் திறக்கும் நபர்கள் யார் எனப்
பார்த்து அவர்களின் விழித்திரையைப் போன்றே மிக மெல்லிய திரையை உருவாக்கி தன்
கண்ணில் பொருத்திக் கொண்டான். அதே போல் பெருவிரலுக்கும் ஓர் உறையை உருவாக்கி
அணிந்து கொண்டான். ஓர் இரவு அந்த வங்கிக்குச் சென்று அங்கு எச்சரிக்கை மணிகளை
முதலில் நிறுத்தினான். காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்தான். வேவு பார்க்கும்
கேமரா இருந்ததால் அதனைச் செயலழிக்கச் செய்வது ஒன்றும் அவனுக்குப் பெரிய வேலை இல்லை. அந்தக் கதவுக்கு அருகில் சென்று
விழித்திரையைக் காட்டினான். பெருவிரலை வைத்தான். கடிகாரத்திலிருந்து லேசர்
கதிர்களைப் பாய்ச்சினான். கதவு திறந்துகொண்டது. உள்ளே சென்று தேவையான பணத்தை
அள்ளிக் கொண்டு முதலில் எல்லாம் எப்படி இருந்ததோ அப்படியே சீர் செய்து
வைத்துவிட்டு கதவையும் பூட்டிவிட்டு வந்துவிட்டான். அந்தக் கண் திரையையும் பெருவிரலின்
உறையையும் கழற்றி வீசினான். காவலாளியிடம் அவன் நெருங்கிப் பழகினான். அதனால் தன் மீது
மயக்க மருந்து தெளித்தது யார் என காவலாளியால் அறிந்து கொள்ள முடியவில்லை. வெளிநாடு
தப்பித்துச் செல்ல விமானநிலையம் வந்தான்.
அவனிடம் ஏதோ ஒரு சக்தி வாய்ந்தப் பொருள் இருப்பதாக அங்கிருந்த கருவி காட்டிக்
கொடுத்தது. அவன் தன் கையில் கட்டியிருந்த லேசர் ஒளிக்கற்றையைப் பாய்ச்சும்
கடிகாரத்தைக் கழற்ற மறந்துவிட்டான். அதைக் கண்டுபிடித்தக் காவல்துறையினர் அவன்
வங்கியில் கொள்ளையடித்ததைத் துருவிப் பார்த்துக் கண்டுபிடித்தனர்.
No comments:
Post a Comment