குட்டிப் பூனையாக அது அவர்கள் வீட்டுக்கு வந்த போது பெரும் குதூகலமாக இருந்தது. அவன் அப்போதுதான் பள்ளியில் சேர்த்திருந்தான். அந்தப் பூனை அவனுடனேயே இருந்தது. அவன் படிக்கும் பாடங்களை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவனுக்கும் பூனையுடன் சேர்ந்து பாடம் படிப்பது மிகவும் பிடித்திருந்தது. இப்படியே ஐந்தாம் வகுப்பு வரை வந்துவிட்டான். அந்தப் பூனையும் இவனுடன் சேர்ந்து பள்ளிக்கு வரும். இவன் சாப்பாட்டை அதற்கும் கொடுப்பான். வகுப்பறைக்கு அருகிலேயே உட்கார்ந்திருக்கும். ஜன்னலில் அமர்ந்து கொண்டு பாடங்களைக் கவனிக்கும். இவனுக்கு ஜன்னலருகில் இருக்கை என்பதால் இவனுக்கு வசதியாகப் போனது. ஒரு நாள் ஆசிரியர் மூன்று விடுகதைகளை வகுப்பில் சொல்லி அதற்கு விடை எழுதுமாறு கூறிவிட்டார். இவனுக்கு என்ன யோசித்தும் விடை தெரியவில்லை. மெதுவாகப் பூனையை நெருங்கி அந்த விடுகதைகளைச் சொல்லி விடை கேட்டான். முதலாவது விடுகதை: வழுக்குவான் வாசம் உள்ளவன். அவன் யார்? என்பதாகும். பூனை ஓடிச் சென்று அருகிலிருந்து தண்ணீர் தொட்டியில் குதித்து அதில் இருந்த தண்ணீரில் குளிப்பது போல் பாவனை செய்தது. வீட்டில் குளிப்பாட்டினால் அதற்குப் பிடிக்கவே பிடிக்காது. இங்கு வந்து குளிக்கிறதே அதுவும் தனக்குச் சந்தேகத்தைத் தீர்க்காமல் குளிக்கப் போய்விட்டதே என ஆதங்கப்பட்டான். குளிக்க விரும்பாத பூனை ஏன் இப்படிச் செய்திருக்கும் என யோசித்தான். விடையைக் கண்டுபிடித்துவிட்டான். சோப்பு. பூனையை மெச்சிக் கொண்டான். அடுத்த விடுகதை: வாயே இல்லாதவனுக்கு ஏராளமான பற்கள். இவன் யார்? என பூனையைக் கேட்டான். பூனை தன் தலையைக் காலால் நீவுவது போல் திரும்பத் திரும்ப செய்து காட்டியது. பூனைக்கும் புரியவில்லை என நினைத்துக் கொண்டான். இருந்தாலும் தானும் ஒரு முறை தலையை நீவிப் பார்த்தான். தலை கலைந்து விடுமே என யோசித்தான். தலை வாராமல் இருந்தால் ஆசிரியர் திட்டுவார் என எண்ணினான். தலை வாரும் சீப்புதான் அதற்கான விடை என உடனே புரிந்துகொண்டான். பூனை மீது வாஞ்சை ஏற்பட்டது. அடுத்த விடுகதை: அதை நீ பார்த்தால் அது உன்னைப் பார்க்கும்-அது எது? என்று பூனையைக் கேட்டான். பூனை, தூணுக்கு நேராக நீன்று காலை நீட்டி தூணைத் தொட்டது. பின்பு தூண் தன் பின்பக்கமாக இருக்குமாறு தன் எதிரில் ஒரு பூனை இருப்பது போல நினைத்து அதே காலை எடுத்து நீட்டியது. இதைத் திரும்பத் திரும்ப செய்து காட்டியது. பூனைக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக எண்ணிக் கொண்டான். தூணைப் பூனை கண்ணாடி என நினைத்துக் கொண்டதாக என யோசித்தான். அதுதான் விடை எனப் புரிந்தது. பூனையின் அறிவு அவனை ஆட்படுத்திவிட்டது. பூனை படித்த பாடங்களைத் தான் ஏன் படிக்கவில்லை என நினைத்துக் கொண்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
பல வண்ண உலகத்தில் முகிழும் ஆற்றல்கள்: ஓவியர் விஸ்வம் அவர்களின் படைப்புகள்
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
குறியியல்-ஓர் அறிமுகம் டேனியல் சேன்ட்லர் குறியியில் பற்றிய ஓர் அறிமுகம் தேவைப்படுபவர்களுக்காக இந்த அறிமுகத்தை டேனியல் சேன்ட்லர் எழுதிய...
-
ஓவியர் விஸ்வம் அவர்களின் இது பல வண்ண ஓவியங்கள் பல வகையான பொருளைத் தந்து வருகின்றன. பார்ப்பவர்களுக்கு அதன் பொருள் இன்னது என்று ஒரு கட்டுப்ப...
-
அவனுக்கு நீண்ட கூந்தல் உள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசையாக இருந்தது. அவன் அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் யாருக்கும் நீண்ட ...
No comments:
Post a Comment