Thursday 14 October 2021

குறுங்கதைகள்-தற்கொலை






அவள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாள். எந்த வழிமுறையில் சாவது என பலமுறை யோசித்தாள். தூக்கில் தொங்குவது சுலபம்தான். ஆனால் சரியாக முடிச்சு விழாமல் உயிர் போகாமல் பெரும் சிக்கலாகிவிடும். அதனால் அது சரியில்லை எனத் தோன்றியது. கடலில் மூழ்கிவிடலாம். அதில் காப்பாற்றப்பட்டால் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கும். தூக்கமாத்திரைகளை எடுத்துக் கொண்டால் ஓரளவு மரணம் நிச்சயம். அவற்றை எப்படி வாங்குவது என சிந்தித்தாள். இரண்டு இரண்டாக பல கடைகளில் வாங்கி சேகரிக்கவேண்டும். அதற்கு நாளாகிவிடும். தற்கொலை எண்ணம் போய்விடும். முயற்சி வீணாகிவிடும். தீ வைத்துக் கொள்ளலாம். வீடே தீ பிடித்துவிட்டால் பலரும் சிரமப்படுவார்கள். மாடியிலிருந்து குதிக்கலாம். கை, கால் உடைந்து உயிர் பிழைத்துவிட்டால் காலமெல்லாம் யாராவது கவனித்துக் கொள்ளும்படி ஆகிவிடும். இரயிலில் போய் விழுந்துவிடலாம். சாவு நிச்சயம். ஆனால் யாரும் காப்பாற்றிவிடக்கூடாது. கை நரம்புகளை வெட்டிக் கொண்டு சாகலாம். அதற்கும் அதிக நேரம் பிடிக்கும். கத்தியால் வயிற்றில் குத்திக் கொண்டு சாகலாம். கத்தி சரியாக இறங்கவிட்டால் வாழ்நாள் முழுக்க உபாதையாகிவிடும். அமிலத்தைக் குடித்துவிட்டால் செத்துவிடலாம். அது சரியாக வேலை செய்யாவிட்டால் வெறும் புண்ணாகி பெரும் அவஸ்தை ஆகிவிடும். எலி மருந்து குடிக்கலாம். வாந்தி எடுத்துவிட்டால் பாதிதான் வேலை செய்யும்.  பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும். பாம்பிடம் கடிபடலாம். அதற்காக ஒரு பாம்பைத் தேடிப் போகவேண்டும். வாகனங்கள் முன் பாயலாம். அவர்கள் ஏற்றாமல் சென்றுவிட்டால் சாக வாய்ப்பு இல்லை. யாருவதுடன் சண்டை போட்டு கொலை வெறி ஊட்டி சாகடிக்கச் செய்யலாம். அவர்கள் கொலைச் செய்யாவிட்டால் சண்டை வீணாகிவிடும். நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து சாகலாம். அதை எங்கு வாங்குவது என யோசனையாக இருந்தது. யாரையாவது கொலை செய்துவிட்டு தூக்குத் தண்டனை பெறலாம். தூக்குத் தண்டனை கிடைக்காமல் ஆயுள் தண்டனை பெற்றுவிட்டால் பெரும்பாடாகிவிடும். எனவே தற்கொலை செய்துகொள்ள வழியே இல்லை. தற்கொலை மனநிலையில் நீடித்து இருப்பதுதான் சாவுக்கு அருகில் இருப்பது போன்றது. சாவு எளிமையானது. வாழ்வதுதான் சாவுக்கு நிகரானது. அதிலிருந்து தப்பிக்கத்தான் தற்கொலை எண்ணம் வருகிறது. எனவே வாழ்ந்திருந்து சாவை அனுபவிப்போம் என முடிவெடுத்தாள். 

No comments:

மார்க் ஆண்டனி: காலக்கோட்டின் மறுசந்திப்பு

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிலிருந்து தொடங்கி எதில் முடிகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தத் திரைப்படத்தை ஏன் ரசிகர்கள் வரவேற்றிருக்கிற...