இங்கிலாந்து
நாவலாசிரியரான சாமுவேல் பெக்கெட் மோலாய் எனும் நாவலை எழுதியிருக்கிறார். அதில் வந்த
மோலாய் பாத்திரத்தைச் சந்தித்தேன். அந்த மோலாய் வயதான முதியவராகிவிட்டார். அவரை
அழைத்துக் கொண்டு மலைப் பாதையில் நடக்கத் தொடங்கினேன். மோலாய் நீங்கள் ஏன் உங்கள்
தாயின் பெயரையும் உங்கள் பெயர் என்றே கூறுகிறீர்கள் என்றேன். என்னை ஏன் தாயாக
உன்னால் பார்க்க முடியாதா என்றார். மோலாய் நாவலில் நீங்கள் ஒரு கொலை
செய்திருக்கிறீர்கள் என்றேன். ஆம் அதனால் என்ன என்றார். வெகு இயல்பாக எப்படி
வாழ்கிறீர்கள் என்றேன். நான் மனப்பிறழ்வு அடைந்திருந்த போது என்னை அறியாமல் செயத
தவறு அது. அதற்கு ஏன் நான் பொறுப்பேற்க வேண்டும் என்றார் மோலாய். இல்லை, கொலை
செய்த பின் மனப்பிறழ்வு வந்துவிட்டது போல் நடித்தீர்கள் அதனால் அந்தப் பொய்யை
உண்மையாக்கப் பார்க்கிறீர்கள் என்றேன். இத்தனைக் காலகட்டத்திற்குப் பின் என்னைப்
படைத்த பெக்கெட்டே இறந்த பின் நான் எதற்கு அந்தக் கொலைக்காகப் பொறுப்பேற்று
வருந்தவேண்டும் என்றார். உயிரைப் பறிப்பது வெகு இயல்பானதா என்றேன். அந்த நேரத்தில்
காட்டில் தன்னந்தனியாக என் மகன் சைக்கிளை எடுத்து வருவான் என்ற எதிர்பார்ப்புடன்
காத்திருந்த போது அந்த நபர் என்னைப் பெரிதும் தொல்லைப்படுத்தினார். எனக்கு
அவரிடமிருந்து தப்ப வேறு வழித் தெரியவில்லை. அதனால் இப்படி ஒரு காரியத்தைச்
செய்துவிட்டேன் என்றார். அது குறித்து குற்றவுணர்வு கூட உங்களிடம் இல்லையே
என்றேன். குற்றவுணர்வு கொண்டால் போன உயிர் திரும்பவந்துவிடுமா என்றார். நீங்கள்
இன்னும் மனப்பிறழ்வில் இருப்பது போலத் தெரிகிறீர்கள் என்றேன். ஆம் அதனால்தான்
உன்னையும் கொல்ல முடிவெடுத்துவிட்டேன் எனக் கூறி என்னுள் கத்தியைச் செருகினார்.
*சாமுவேல்
பெக்கெட் எழுதிய நாவலில் வந்தப் பாத்திரம் மோலாய். இங்கு அது மீண்டும்
எடுத்தாளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment